Monday, August 11, 2008

பகுதி இரண்டு

இறைவன் இருப்பதை அறிந்தேன் !
கடைசியில் "ஆண்டவரே நீர் யார் என்று எனக்கு தெரிந்தால் நீர் சொல்லும் உமது வர்த்தைகளுக்கெல்லாம் என்னால் முடிந்த அளவு கீழ்படிந்து வாழுவேன்" என்று உறுதியளித்தேன். உடனே திடீரென என் கண்ணீர் நிறைந்த கண்களுக்கு முன்னால் ஒரு படம் போல் தோன்றியது! அதில் வலதுபுறம் இந்த பைபிளும், இடதுபுறம் கட்டுகட்டாக பணமும் இருந்தது! இந்த இரண்டில் எது வேண்டும்? என்ற கேள்வியும் என் மனதில் கேட்கப்பட்டது. எதை வேண்டுமானாலும் என்னால் தர முடியும் பணத்தை எடுத்தால் இந்த உலகில் மிக சொகுசாக வாழ முடியும், ஆனால் வேதத்தை தேர்ந்தெடுத்தால் நீ வேறு எதையும் எதிர்பார்க்க கூடாது என்று என் மனதில் எதோ ஒன்று பேசியது.
.
எனக்கு எதை தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை. சிறிது நேரம் மிகுந்த குழப்பத்தில் இருந்த நான், இறுதியில் பணத்தை ஒதுக்கி வேதத்தை தேர்ந்தெடுத்தேன்.
.
ஆண்டவரே "நீர் யார் என்று மட்டும் எனக்கு தெரிவித்து, நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் சரியான பதிலை தந்துவிட்டால், நீர் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்" என மீண்டும் உறுதியளித்தேன். அவ்வளவுதான் எதோ ஒன்று என் மனதுக்குள் புகுந்ததுபோல் இருந்தது மீண்டும் மனதுக்குள் பயங்கர குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை மட்டும் உறுதியாக அறிந்துகொண்டேன்.
.
மூன்று நாட்கள் போராட்டம் :-
அடுத்த மூன்று நாளாக என் மனதுக்குள் ஒரே போராட்டம! ஒரு புறம், "நீ ஏன் பணத்தை கேட்கவில்லை நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டாய். இப்பொழுது உனக்கு பதிலும் கிடைக்காமல் பணமும் கிடைக்காமல் போய் விட்டது பார்த்தாயா! பணம் இருந்தால் போதுமே எல்லாம் நடக்குமே! விட்டுவிட்டாயே" என்று என் மனதை போட்டு எதோ பிழிந்து எடுப்பது போல ஒரே வேதனை. அந்த சத்தம் போராட்டம் எல்லாம் அந்த மூன்று நாளும் என்னுடன் எவ்வளவோ போராடியும் என்னுள் இன்னொரு சக்தி இருந்து அதன் சத்தத்துக்கு அடிபணிந்து, நாம் இப்படி நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டோமே என நினைக்க கூட செய்யாமல் பார்த்துக்கொண்டது.
.
அந்த மூன்று நாளும் நான் பட்ட வேதனையை சொல்ல முடியாது. நான் ஒரு பிணம் போல அலைந்தேன். மனதின் உள் எல்லாம் எப்பொழுதும் இரண்டுபேர் சண்டை போடுவதுபோல் ஒரே சத்தம் அதனால் ஒரே குழப்பம்.
.
இறைவனின் ஆவியால் நிரப்பப்பட்டேன்:
கடைசியாக மூன்றாவது நாள் அதிகாலை 4 மணிக்கு நான் எழுந்தபோது என் மன போராட்டம் எல்லாம் போய் எனக்கு மனது என்ற ஒன்றே இல்லாததுபோல ஆகி விட்டது! மின் விளக்குகள் எல்லாம் மிக பிரகாசமாக தெரிந்தது! உலகமே மிக மிக வித்யாசமாக தெரிந்தது!
ஐயோ அந்த இன்பத்தையும் சந்தோசத்தையும் சொல்ல கண்டிப்பாக வார்த்தைகள் கிடையாது!
.
மனிதர்கள் எல்லாம் உண்மை மனிதர்களே அல்ல ஒவோருவர் உள்ளும் எதாவது அசுத்த ஆவி குடிகொண்டிருப்பதை அப்படியே என்னால் பார்க்க முடிந்தது. பொறாமை ஆவிகள், வஞ்சக ஆவிகள், பொய்யின் ஆவிகள், பெருமையின் ஆவிகள், பண பேய்கள், இரக்கமில்லா ஆவிகள் என எத்தனையோ வித விதமான ஆவிகள் ஒவ்வொருவருள்ளும் இருந்து ஆட்டிபடைப்பதை அப்படியே பார்க்க முடிந்தது
.
பேய்! பேய்! உலகத்தில் உள்ள எல்லாருமே இறைவனின் பார்வையில் பேய்கள் என்பதை நானே எனது கண்ணால் பார்த்தேன் எப்படியெனில் இறைவன் என் கண்களை திறந்திருந்தார். ஆம் அன்பானவர்களே நமக்கு மாமிச கண் என்று ஒன்று இருந்தாலும் அனேக காரியங்களை அதனால் பார்க்க முடியாது. ஆனால் இறைவனது கண்ணின் வழியாக இந்த உலகை பார்க்கும் போது உலகில் உள்ள ஆவிகளின் கூட்டம் மற்றும் ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டுள்ள அசுத்த ஆவி எல்லாவற்றையும் மிக துல்லியமாக பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பது கூட நம் மனதில் அப்படியே தெரியும். (அதை சொல்லி விளக்க முடியாது அனுபவித்தால்தான் உணர முடியும்)
.
நண்பர்களின் ஆவேசம்:எனது அறையில் என்னுடன் இருக்கும் எனது நண்பர் காலையில் எழுந்த உடனே மிகுந்த கோபத்தில் இருந்தார். என்னை பார்த்த எனது நண்பருக்கு என்மேல் கடும் கோபம் வந்துவிட்டது. அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் அவர் என்னை பார்த்து "நீ என்னை கொல்லப்போகிறாய், நேற்று இரவு என்னை நீ கொல்வது போல ஒரு பயங்கர கனவு கண்டேன். இனிமேல் ஒன்று நீ இருக்க வேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும் என்று என்னிடம் கடும் கோபத்துடன் சண்டைக்கு வந்தார்.
.
என்னால் நம்பவே முடியவில்லை இவரா இப்படி? கடந்த 4-5 வருடமாக சகோதரர் போல் பழகி எப்பொழுதும் சேர்ந்து தண்ணி, சிகரெட் என சந்தோசமாக மிக மிக நெருக்கமாக நான் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கக்கூடியவராக இருந்த இவர் நான் இந்த பைபிளை எடுத்ததும் இப்படி எப்படி மாறினார் என்று ஒரே குழப்பம். அவரிடம் அண்ணாச்சி நான் உங்களை கொல்வேனா? அது கனவுதானே மறந்துவிடுங்கள் என்று எவ்வளவோ சொல்லி அழுத்தும் அவர் கொஞ்சமும் கேட்கவில்லை உடனே நான் அந்த இடத்தை விட்டு எழுந்து பக்கத்து தெருவில் இருக்கும் இன்னொரு நண்பரிடம் சொல்ல கிளம்பிவிட்டேன்.
..
நான் காலையில் அந்த நண்பர் வீட்டுக்குள் நுழையும் போது (அவர் ஒரு CSI கிறிஸ்தவர்) பைபிளை வாசித்துக்கொண்டிருந்தார். என்னை கண்டதும் சந்தோசத்துடன் அருகில் அமர சொன்னார். நானும் அவர் முன் அமர்ந்து எனக்கு பைபிள் கிடைத்த விதம் முதல் அந்த நண்பர் நடந்து கொண்டது வரை சொல்ல சொல்ல அவர் மனது அப்படியே என்மேல் கோபமடைவதை என்னால் உணர முடிந்தது. நேற்று வரை பிறன் மனைவி, தண்ணி, சிகரட் என்று சுற்றி விட்டு இன்று பைபிளை தூக்கியவுடன் நல்லவன் அகிவிடுவாயா? என்று அவர் மனதில் நினைப்பது அப்படியே எனது மனதில் தெரிந்தது. அவரால் சரியாக ஒரு வார்த்தையும் என்னுடன் பேச முடியவில்லை அவரும் கோபமாக ஓரிரு வார்த்தைகள் பேசி என்னை கிளம்ப சொல்லிவிட்டார்.
.
மிகவும் வேதனையுடன் வெளியே வந்த என் மனதுள் இருந்து "யாரும் உன்னுடன் பேச மாட்டார்கள் முழுவதும் பாவத்தில் மூழ்கி அசுத்த ஆவிகளின் கோர பிடியில் உள்ள இவர்களால் பரிசுத்தமான இறைவன் முன் நிக்க முடியாது. உன்னுள் நான் இருப்பது அதற்கு தெரிகிறது அதனால் தன் கோபப்படுகிறது. நீ பைபிளை திற நான் உன்னுடனே பேசுகிறேன் என்னை கேள் நான் உனக்கு பதில் சொல்கிறேன்" என்றது (இதை எழுதும் போது இன்றும் நான் கண் கலங்குகிறேன். ஆம், அந்த இறைவனின் ஆறுதலான வார்த்தைக்கு இணையே இல்லை அன்பானவர்களே)
.
இறைவன் என்னோடு பேசினார்:அதன் பிறகு இறைவன் என்னோடு பலவிதங்களில் பேச ஆரம்பித்தார். பைபிள் மூலம், விளம்பர பலகையின் மூலம், சுவரொட்டிகள் மூலம் என்று உலகில் என்னென்ன இருக்கிறதோ எல்லாமே எனக்கே எழுதியிருப்பது போல என்னுடன் பேச ஆரம்பித்தது.
.
நான் இறைவனிடம் "நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என கேட்ட போது நீ இந்த பிரச்சனையில் இருந்து முழுவதும் தப்பிக்க உடனடியாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும்" என்றார். எனக்கு ஒரே குழப்பம் நான் பெண்ணுக்கு எங்கே போவேன்? என நினைத்துக்கொண்டு கையில் உள்ள பைபிளை எடுத்துக்கொண்டு இங்கேயே(மும்பையில்) எனக்கு பெண் பார்க்க வேண்டுமா? என கேட்டுக்கொண்டே பைபிளை திறந்தேன். அப்பொழுது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்னோடு பேசியது "நீ குடியிருக்கும் இந்த தேசத்தில் உனக்கு பெண் கொள்ளாமல் உன் சொந்த தேசத்துக்கு போ" என்றது.
.
எனது சொந்த ஊருக்கு புறப்பட்டேன்:உடனடியாக நான் எதையும் யோசனை பண்ணாமல் கையில் அந்த பைபிள் மற்றும் கொஞ்சம் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு மும்பையில் இருந்து சென்னை வர புறப்பட்டேன். கல்யாண் என்ற இடம்வரை வந்து தாதர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை பிடித்து ஜெனரல் கம்பார்ட்மெண்டில் ஏறினேன் உடனே எனக்கு சீட் கிடைத்தது உடகார்ந்து பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் அவ்வளவுதான் அடுத்த 28மணி நேரம் சென்னை வந்து சேரும் வரை நான் இந்த உலகத்திலேயே இல்லை.
.
இறைவன் என்னை முழுவதும் ஆவியினால் நிரப்பி இந்த உலகம் தோன்றியதிலிருந்து என்ன நடந்தது என்ற எல்லா விஷயங்களையும் அப்படியே ஒரு படம் போல என் மனகண்முன்னால் ஓடவிட்டார். மேலும் பைபிளை பற்றி ஒன்றுமே தெரியாத என்னிடம் அவர் தெரியப்படுத்தியதில் கொஞ்சம் குறைய எல்லாமே அதில் எழுதியிருப்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிகாட்டினார்.
.
நடந்த எல்லாவற்றையும் கேட்க கேட்க என் கண்ணில் இருந்து கண்ணீர் அடக்க முடியாமல் வந்துகொண்டே இருந்தது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்களை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றவும் ஒருவர் கூட நரகம், பாதளம் என்ற மிக கொடூரமான இடம் போய்விடாமல் தடுக்கவும் அவர் செய்திருக்கும் காரியங்கள் எத்தனையோ!! இறைவன் மனிதர்கள் ஒவ்வொருவருக்காகவும் பரிதபிப்பதை என்னால் அறிய முடிந்தது

.
ஆதியில் இருந்து பல்வேறு தூதர்களின் மூலம் நான் பேசியது உண்மை தான், ஆனால் யாருக்கும் நான் முழுமையாக வெளிப்படவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல ஒவொரு தூதர்களும் சொல்வதெல்லாம் என்னுடைய ஒரு பகுதி மட்டும்தான். நான் எதிர்பார்ப்பது வேறு உலகில் மனிதர்கள் செய்வது வேராக இருக்கிறது என்றும், ஒரு கட்டளையை சரியாக பெரிதாக்கி சொல்லும் அதே மார்க்கம் முக்கியமான இன்னொரு கட்டளையை மறைத்துவிடுகிறது. ஒருவர்கூட என் எதிபார்ப்பை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனால் தீமையை இந்த உலகில் இருந்து விரட்ட முடியவில்லை என்றும் கூறினார்

தொடர்ந்து படிக்க.....

பகுதி மூன்று

எனது புத்திஈனமான செயல்-1:-
இரவு சுமார் 10மணிக்கு சென்னை வந்து சேர்ந்த நான் எனது உராகிய தூத்துக்குடி போக பஸ் ஏறினேன். சென்னை To தூத்துக்குடி சுமார் 600KM. இரவு 11.00 மணிக்கு சென்னையில் ஒரு தனியார் பஸ்ஸில் ஏறினேன். பஸ் திருச்சி பக்கம் போகும் போது விடிந்துவிட்டது. இறைவன் என்னை பஸ்ஸில் இருந்து இறங்க சொன்னதால் இறங்கிவிட்டேன். அது ஒரு கிராமம் அங்கு பஸ் ஸ்டாப்பில் இருந்த பலரை பார்த்தபோது இறைவன் என்னுள் "ஐயோ இந்த ஒன்றுமறியாத ஜனகளை நான் எப்படி அழிப்பேன் அவர்களுக்கு என்னை பற்றி சொல் என்றார்" பலருக்கு இறைவனை பற்றி சொன்னேன். .
.
அந்த இடத்தில் என்னிடத்தில் சில மாற்றங்கள் தெரிந்தது. பல அசுத்த ஆவிகள் என்னை திசை திருப்ப முயற்சித்தன. நான் அதிகமாக சிகரெட் குடிப்பவன். எனக்கு அங்கே சிகரெட் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என்னால் தவிர்க்க முடியவில்லை. கடையில் சென்று சிகரெட் வாங்கி புகைத்தேன். சிறிது நேரத்தில் மனதெல்லாம் ஒரே சங்கடமாக யாரோ மனதை போட்டு பிழிவதுபோல இருந்தது. நான் இருந்த இடத்துக்கு பக்கத்தில் ஒரு லாரி விபத்து ஏற்பட்டு எல்லோரும் ஓடினார்கள். என்னால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. என்னுடன் பேசிய இறைவனை சிறிது நேரம் காணவில்லை. மிகுந்த சங்கடத்தோடு ஒரு பஸ்ஸில் ஏறி மதுரை நோக்கி சென்றேன்.
.
மீண்டும் இறை ஆவி வந்தது: சுமார் 30நிமிடங்கள் அந்த சங்கடம் நீடித்தது பிறகு மனதில் சமாதானம் வந்தது. மீண்டும் இறைவனின் அபிஷேகம் வந்தது என்னுள் பேசினார் முக்கூடல் என்னும் வூருக்கு போகவேண்டும் என்று எனக்கு முன்பே ஒரு வழிகாட்டுத்தல் இருந்தது. அந்த இடம் திருநெல்வேலிக்கு பக்கத்தில் இருப்பது எனக்கு தெரியும். அதனால் மதுரை வந்து அங்கிருந்து முக்கூடல் போய் சேர்ந்தேன். வழிஎல்லாம் வழியெல்லாம் இறைவனின் ஆவி என்மேல் பலமாக இருந்ததால் நான் நான் எப்படி இருந்தேன் என்பது எனக்கே சரியாக தெரியாது.
.
முகூடலில் ஒரு புதிர்:
நான் முக்கூடல் வூர் வந்து சேரும் போது இரவாகி இருந்தது பஸ்ஸை விட்டு இருங்கும் போது மிகப்பெரிய மழை பெய்துகொண்டிருந்தது. அது ஒரு சின்ன கிராமம் போல் இருந்தது. (அங்கு நடந்த காரியங்கள் இன்னும் எனக்கு சரியாக புரியவில்லை ஆனாலும் எழுதுகிறேன்) அந்த இருட்டில் மழையில் நனைந்து கொண்டு வீடுகளை நோக்கி நடந்தபோது ஒரு மனிதனை பார்த்தேன். அவர் ஒரு கூன் விழுந்த குறைந்த வயது பிச்சைக்காரர் ஆனால் அவர் பார்ப்பதற்கு அப்படியே இயேசு போல இருந்தார். நான் அவரிடம் சென்று பேசியபோது அவர் இந்தியில் பேசினார். அவர் பூனேயில் இருந்து நேற்றுதான் வந்ததாகவும் கூறினார். அவர் இரண்டு கையையும் "நிமிர்ந்து நில்லுங்கள்" என உயரே தூக்கியபோது அவர் இயேசு எப்படி சிலுவையில் தொங்கினாரோ அப்படியே தெரிந்தார்.
.
என்னுள் இருந்த இறைவன் இவ்வாறு பேசினார் "இன்று உலகத்தில் இயேசுவின் நிலையும் இதுதான். ஆரம்பத்தில் கிறிஸ்தவத்துக்குள் அடி எடுத்து வைக்கும் எல்லோரும் மிக மிக உற்சாகமாக பரிசுத்தமாகத்தான் வருகின்றனர், ஆனால் நாளடைவில் உலகத்துடன் ஒத்த வேஷம் போட ஆரம்பித்து விடுகின்றனர். இயேசுவோ அவர் சீஷர்களோ வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்கள் எதையும் தங்களுக்கென்று சம்பாதிக்க வில்லை சேர்த்து வைக்கவும் இல்லை. ஆனால் இன்றைய கிறிஸ்தவம் எதோ ஒரு காரணத்தை சொல்லி பணத்தை சேர்ப்பதிலும் நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்வதிலும் உலகத்தார் வாழ்க்கையை உணர்த்துகிறதே தவிர, வேறு எதுவும் இல்லை. கிறிஸ்து சொன்ன வார்த்தை படி யாராவது வாழ்கிறார்களா என்றால் ஒருவரும் இல்லை. உண்மையான இயேசுவை புறம்பே தள்ளி விட்டார்கள்." என்றார். நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் ஆகையால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை!
.
அந்த பிச்சைக்காரரை ஒரு ஹோட்டல் அழைத்த்துபோய் உணவு வாங்கி கொடுத்தேன். அந்த ஹோடலினுள் நான் பார்த்தபோது எல்லோரும் மிக சோகமாக தெரிந்தார்கள் உள்ளே உள்ள ரேடியோ "எல்லோர்க்கும் தலை மேல எழுத்தொன்று உண்டு என்னான்னு யார் சொல்ல கூடும், கண்ணீர கொடம் கொண்டு வடிச்சாலும் கூட எந்நாளும் அழியாமல் வாழும்" என்ற சின்னத்தம்பி படபாடலை பாடிகொண்டிருந்தது. அப்பொழுது இறைவன் என்னுள், "இந்த ஜனங்களை பார்த்தாயா அவர்கள் சோகம், துக்கம், பிரச்சனை, தலைவிதி எல்லாவற்றையும் ஒரே நொடியில் என்னால் மாற்ற முடியும். ஆனால் யாரும் என்னை முழு மனதோடு தேடாமல் தன் சுய பலத்தால் சாதிக்க நினைத்து அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற என்னை அவர்கள் வழிக்கு துணையாக நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! என்னை வைக்க வேண்டிய இடத்தில் பணத்தை வைத்து, அதை தேடுவதிலேயே குறியாக இருக்கின்றனர்! எதிர்பார்த்தது நடக்காவிட்டால் யார் மீதிலோ அல்லது விதியின் பேரிலோ பழியை போட்டுவிட்டு குருடன்போல தடவிதிரிகிறார்கள், இவர்கள் என்று திருந்துவார்களோ" என்று மிகவும் வருந்தினார்.
.
எனது புத்திஈனமான செயல் -2
மீண்டும் திருநெல்வேலி வந்து நான் சேரும் போது இரவு 11.30. பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்த எனக்கு "மும்பையில் இருந்து இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது இங்கிருந்து சுமார் 60KM தூரத்தில் உள்ள எனது வூராகிய தூத்துக்குடி போய் எனது வீட்டில் உள்ளவர்களை பார்க்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது. அது பற்றி இறைவனிடம் எதுவும் விசாரிக்காமல் அங்கிருந்து தூத்துக்குடி போக பஸ்ஸில் ஏறினேன்.


. (நான் என் சுய பலத்தில் இல்லாமல் இறைவனின் ஆவியால் தாங்கப்பட்டு நடத்தப்படேன் மும்பையில் இருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் அது. எனக்கு பசி, தூக்கம், களைப்பு எதுவுமே சிறிது கூட தெரியவில்லை. ஆனாலும் இறைவன் சில நேரங்களில் மட்டுமே என்னோடு தானாக பேசுவார். பல நேரங்களில், நான் எதாவது நினைத்தாலோ கேட்டாலோ, என் கண் முன்னால் இருக்கும் எந்த ஒரு பொருளும் அதற்கான பதிலை சொல்லியது. இந்த உலகத்தில் உள்ள எல்லா எழுத்துக்கள் படங்கள், உயிரினங்கள் எல்லாமே நமக்கு ஒரு இறை செய்தியை சொல்கிறது ஆனால் நம் புத்திக்குத்தான் அந்த இறை செய்தி எட்டுவதில்லை! )
.
நான் எனது வீடு வந்து சேர்ந்து கதவை தட்டும் போது சரியாக இரவு 1 மணி. கதவை திறந்த எனது அம்மா அப்படியே ஷாக் ஆகி விட்டார்கள். அந்த வீடு கட்ட ஆரம்பிக்கும் போது சுமார் 2 வருடத்துக்கு முன் அங்கிருந்து மும்பை போன நான், திடீர் என்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து நிற்பதை பார்த்தவுடன் அம்மா மட்டுமல்ல என் தம்பி தங்கை அனைவருக்கும் ஒரே பதட்டம்.
.
நான் அவர்களிடம் "இறைவன் என்னை இதுபோல் புறப்பட்டு வர சொன்னார் அது தான் உடனே புறப்பட்டு வந்தேன்" என்றதும் அவர்கள் இவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் எனக்கு அவர்களை பார்த்த போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பிசாசின் ஆவி இருப்பது அப்படியே தெரிந்தது. அங்கு இருக்கவே மனதில்லை. ஆனால் வந்தாகி விட்டதே என்ன செய்ய என நினைத்துக்கொண்டு உள்ளே சங்கடத்தோடு அமர்ந்திருந்தேன். . எனது அம்மா "சரி படுத்து தூங்கு காலையில் எல்லாம் பேசலாம்" என சொல்லிவிட்டு தூங்க போய் விட்டார்கள். . (எனது அப்பா இரவு வேலைக்கு போய் விட்டதால் வீட்டில் இல்லை. எனக்கு இரண்டு தம்பிகள் ஒரு தங்கை மற்றும் ஒரு அண்ணன் அதில் ஒரு தம்பி மட்டும் இயேசுவை ஏற்றுக்கொண்டவன்.)
.
எனது வீட்டில் என்னை சிறை வைத்தனர்:
மறுநாள் காலை எழுந்த போது எல்லோரும் என்னை ஒருவிதமாக பார்க்க ஆரம்பித்தனர். இயேசுவை ஏற்று கொண்டிருந்த எனது தம்பி மட்டும் என்னுடன் சிறிது நேரம் பைபிள் பற்றி பேசினான். நான் இறைவனை குறித்து சொன்னதை அவனால் சரியாக நம்ப முடியவில்லை அவன் வெளியே போய் விட்டான். அவனை தவிர மற்ற எல்லோருக்குள்ளும் ஒவொரு பிசாசின் ஆவி இருப்பதை என்னால் அப்படியே பார்க்க முடிந்தது. மேலும் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே பாதாளத்துக்கு போகும் குழி ஒன்று இருப்பது என் கண்ணுக்கு தெரிந்தது. என் அம்மா சாதரணமாக இருப்பது போல இருக்கும் திடீர் என அந்த பாதாளத்துக்குள் இருந்து ஒரு பிசாசின் ஆவி என் அம்மாவின் உள்வந்து புகுந்துவிடும். உடனே அவர்கள் பேச்சு செயல் எல்லாம் வேறு விதமாக மாறிவிடும். அதுபோல் ஆவிகள் வெளியே வருவதும் உள்ளே போவதும் அப்படியே எனக்கு தெரிந்தது. அவர்களிடம் அதை பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. (சொன்னாலும் பேயின் ஆவி உங்களுக்குள் வருகிறது என்று எப்படி சொல்ல? மற்றும் நான் சொல்ல போனால் ஒரு நொடியில் அந்த ஆவி அவர்களுள் வந்து விடுகிறது. நான் என் அம்மாவிடம் சொல்வேனா அந்த பேய் ஆவியிடமே சொல்வேனா என்று எனக்கே தெரியாது) இப்படிபட்ட ஒரு நம்பமுடியாத பயங்கர சூழ்நிலையில் ஏன் இங்கு வந்தோம் என நினைத்துக்கொண்டு இருக்கும் போது எனது அப்பா வந்துவிட்டார்கள்.
.
வந்த அப்பா 2 வருடம் கழித்து வந்த மகனை எப்படி நடத்தவேண்டும் (எனக்கும் என் அப்பாவுக்கும் எந்த சண்டையும் கிடையாது அவர்கள் மிகவும் நல்லவர்) ஆனால் அன்று வந்தவுடன் கோபமாக என்னிடம் நீ இங்கு ஏன் வந்தாய்? என்றார்கள். எனக்கு தூக்கி வாரி போட்டது ஏனென்றால் அவர்களுக்குள் ஒரு தலைமை பிசாசு இருப்பது எனக்கு தெரிந்தது அந்த பிசாசு என்னை பார்த்து (என்னுள் இருக்கும் இறைவனை பார்த்து) "இங்கு நீ ஏன் வந்தாய்"? என கோபமாக கேட்டதோடு, "உடனே போலீசுக்கு போன் பண்ணி இவனை பிடித்துக்கொடுங்கள்" என பல்லை கடித்துக்கொண்டு என்னை பிடிக்கவந்தது. எனென்றால் போலீஸ் என்றால் எனக்கு முன்பிருந்தே கொஞ்சம் பயம் உண்டு. அதை வைத்து அந்த பிசாசு என்னை பயம் காட்டி பார்த்தது.

(இதை படிக்கும் அன்பு சகோதர சகோதரியே உங்களுள்ளும் ஒரு ஆவியோ பல அவிகளோ இருந்து இதை எல்லாம் நம்ப விடாமல் நிச்சயம் தடுக்கும் ஏனென்றால் நீங்கள் இதை எல்லாம் நம்பி திருந்தி விட்டால் அந்த ஆவிகளை வரவிடாமல் தடுக்கும் வழி உங்களுக்கு தெரிந்துவிடுமே என்ற பயம் தான்.) . நான் என் அப்பாவிடம் "நான் என்ன பண்ணினேன் என்று என்னை போலீசில் பிடித்துக்கொடுக்க போகிறீர்கள்" என்று சொல்லி அழுத போது. எல்லோருமாக சேர்ந்து என்னை எங்கும் போகவிடாமல் உள்ளேயே வைத்திருந்தனர். இறைவன் என்னை வெளியில் கிளம்பிம்படி சொன்னார் ஆனால் என்னை எல்லோரும் சேர்ந்து பிடித்து வீட்டில் உள்ள ஒரு அறையில் போட்டு அடைத்து ஒருவர் மாற்றி ஒருவர் காவல் காக்க ஆரம்பித்துவிட்டனர். அப்பொழுது இறைவன் "என்னிடம் விசாரிக்காமல் என் இங்கு வந்தாய் இரவு வரை இங்கேயே இரு என கடிந்துகொண்டர்".
..
அந்த நேரம் தூத்துக்குடியில் மிக பெரிய புயல் ஒன்று உருவாகி இருந்தது அது எந்நேரமும் கரையை கடக்கும் என எதிபார்க்கப்பட்டது அகவே சாயங்காலம் 3-4மணிக்கெல்லாம் அதி வேகமான காற்று வீசிககொண்டிருந்தது. இறைவன் மிக கோபமாக இருந்தார் அவர் என்னிடம் "நான் இந்த ஜனங்கள் எல்லோரையும் ஒரே நொடியில் அழித்துவிடுவேன் ஆனாலும் இந்த ஒன்றுமறியாத ஜனங்களை எப்படி அழிப்பேன் என்று மிகவும் வருந்தினர். முதலில் உனக்கு ஒரு துணையை தருகிறேன் இரவு புறப்படு" என்றார். .
.
இரவில் தூங்க போகும் போது என்னை ஒரு அறையில் தனியாக போட்டு ஒரு வாசலை உள்ளே பூட்டி சாவி எனது அம்மா வைத்துக்கொண்டார்கள் . பின்புற வாசலில் எனது தம்பி உள்ளே பூட்டி யாரும் வெளியே போக முடியாதபடி கால் நீட்டி படுத்திருந்தான்.
.

நான் படுத்தவுடன் தூங்கிவிட்டேன் ஆனால் சுமார் 11மணிக்கு இறைவன் என்னை எழுப்பிவிட்டர் " எழுந்து நட என்றார்" உடனே பைபிளை கையில் எடுத்துக்கொண்டு பின் வாசல் பக்கம் வந்தேன். நான் வந்ததும் எனது தம்பி காலை வேறு பக்கம் திருப்பி வழிவிட்டான் எனக்கு எந்த தடையும் இல்லை லேசாக கதவை திறந்து வெளியே வந்துவிட்டேன் அங்கிருந்து பஸ்ஸ்டாண்ட் சுமார் 2 KM இருக்கும் நடந்து பொய் சேர்ந்தேன். அங்கிருந்த திருச்செந்தூர் பஸ்சில் ஏறும்படி இறைவன் சொன்னார். ஏறினேன் பஸ் உள்ளே இருந்தவர்கள் எல்லோருமே எனக்கு மனிதனாக தெரியவில்லை எல்லோரும் பிசாசுகள் போலதான் தெரிந்தார்கள். . பஸ் முக்காணி என்ற இடம் வரும் போது இறைவன் இறங்கும்படி சொன்னார். இறங்கினேன். அந்த இடத்தில் ஒரு பாலம் உண்டு (அதாவது தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறு ஒன்று அந்த முக்காணி வழியாக ஓடி கடலில் கலக்கும். வூர் கொஞ்சம் உள்ளே தள்ளி இருப்பதால் அந்த இடம் பெரிய காடுபோல் இருந்தது. கொஞ்சம் முன்பு வீசிய பலமான காற்றில் மரங்கள் வாழைகள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. காற்று சற்று ஓய்ந்திருந்தது) புயல் மழையால் அந்த ஆற்றில் மிக அதிகமாக வெள்ளம் பயங்கர இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. என்னை இறக்கிய பஸ் பக்கத்தில் இருக்கும் அந்த பாலத்தை கடக்கும்போது. அதன் ஹெட் லைட் வெளிச்சத்தில் ஒரு பெண் தனியாக பாலத்தின் மேல் என்னை நோக்கி நடந்து வருவது தெரிந்தது.
.
இறைவன் என்னிடம் "இவள் ஒரு திருமணமாகாத பெண், நீ அவளருகில் உடனே போ" என்றார். . நான் மிகவும் பயந்துவிட்டேன். ஒரு வேளை அந்த பெண் என்னை ஆற்றில் தள்ளி விட்டுவிட்டால் என்ன செய்வது, தண்ணீர் என்னை கடலுக்கு கொண்டுபோய் விடுமே என்ற பயம் ஏற்பட்டதால் நான் போக மறுத்துவிட்டேன். இறைவன் எவ்வளவோ சொல்லியும் அந்த திசையை நோக்கி போகாமல் வேறு திசையை அதாவது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். . ஊரினுள் போனதும் எனக்கு இறைவன் ஒரு வீட்டை காண்பித்து இந்த வீடினுள் போ என்றார் நான் உள்ளே போனேன். அது ஒரு பெரிய வீடு. காம்பவுண்டு சுவரை பின்புறமாக கடந்து உள்ளே போனேன். அப்பொழுது மணி சரியாக இரவு 1 பவர் இல்லாத காரணத்தால் பயங்கர இருட்டு. வீட்டின் முன் கதவு ஒரு இரும்பு கேட்டாக இருந்தது. அங்கு நிற்று சத்தமாக "கொஞ்சம் கதவை திறவுங்கள்" என சத்தம்போட்டேன். நான் ஒரு 10 நிமிடம் சத்தம் போட்ட பிறகு ஒரு பெரிய கருப்பு மனிதர் கையில் டார்ச் லைட் எடுந்துக்கொண்டு உள்ளே இருந்து வந்தார். கேட்டை திறக்காமலே உனக்கு என்ன வேண்டும் என்றார். நான் அவரிடம் இந்த வீட்டில் எனக்கான பெண் இருக்கிறது என்று இறைவன் சொல்லுகிறார் ஆகையால் மும்பையிலிருந்து வருகிறேன் கொஞ்சம் கதவை திறங்கள் என்றேன்.
.
உடனே அவர் கோபமாக "இங்கு பெண்ணும் இல்லை ஒன்றும் இல்லை உடனே போய்விடு" என்றார். நான் என்ன இவர் இப்படி சொல்கிறார் என்று காலுக்கு கீழே பார்த்தபோது அந்த பெண்ணின் செருப்பு கிடந்தது. உடனே அவரிடம் "அந்த பெண்ணின் செருப்பு கூட இதோ கிடக்கிறதே என்றேன்". அவர் "எதுவானாலும் காலையில் பேசி கொள்ளலாம் நீ காலையில் வா" என சொல்லிவிட்டு உள்ளே பொய் விட்டார். .
.
அப்பொழுது இறைவன் என்னிடம் "பார்த்தாயா உன்னிடம் அப்பொழுதே சொன்னேன் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கிடைத்த பெண்ணை விட்டுவிட்டாய் இனி உனக்கு பெண் கிடைப்பது கடினம்" என்றார். திரும்ப பஸ்ஸ்டாப் போய் அங்கிருந்து பஸ் ஏறி பக்கத்தில் உள்ள ஆத்தூர் என்னும் கிராமத்தில் இறங்கினேன். மணி சுமார் 2 இருக்கும். அங்கிருந்த ஒரு டீகடையின் டீ ஒன்று சொல்லிவிட்டு பெஞ்சில் போய் அமர்ந்தேன். அந்த டீகடைக்காரர் பக்கத்தில் இருந்த இன்னொருவரிடம் சத்தமாக "நேற்று இதே நேரத்துக்கு ஒரு பெண் தூக்கத்தில் வீட்டில் இருந்து எழுந்து நடந்து வந்து எனது கடையில் நெடுநேரம் அமர்ந்திருந்தாள் நாங்கள் அவள் வீட்டு விலாசத்தை கேட்டு காலையில் அவள் வீட்டில் கொண்டு விட்டு வந்தோம்" என்று சொன்னார். . அப்பொழுது இறைவன் என்னிடத்தில்" நேற்று நீ இங்கு வரவேன்டியதாய் இருந்தது அந்த பெண்ணை உனக்க்காகத்தன் அழைத்து வந்திருந்தேன் ஆனால் நீ உன்னுடைய தவறான விருப்பத்தால் உனது வீட்டுக்கு போய் விட்டாய். இன்றும் நான் அந்த பாலத்தில் வந்த பெண்ணை தோடு என்று சொன்னேன் என்மீது முழு விசுவாசம் இல்லாமல் தொட மறுத்துவிட்டாய்." என கடிந்துகொண்டார். .
.
பில்லிசூனியம், செய்வினை பேய்களை விரட்டினேன்.
இறைவன் என்னை எழுந்து நட என்றார், நடந்து சிறிது தூரம் போனதும் ஒரு இடத்தில் அனேக நாய்கள் ஒரு இருட்டில் சண்டை போட்டுக்கொண்டு கத்திக்கொண்டு இருந்தன அந்த நாய்களை நோக்கி போ என்றார் அந்த இருட்டில் ஒரு பாழடைந்த இந்து கோவில் ஒன்று இருந்தது அதன் உள்ளிருந்து தான் நாய்களின் சந்ததம் வந்தது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் இன்னொரு முறை இறைவனின் சொல்லை தட்டக்கூடாது என்று உறுதியில் அந்த பாழடைந்த கோவில் பக்கம் போனேன். அப்பொழுது இறைவன் என்னிடம் இந்த கோவிலில்தான் சகல பில்லிசூனியங்களும், செய்வினைகளும் செய்து வைக்கப்படுள்ளது அதை ஒரு பிசாசு காவல் காக்கிறது, நீ கையில் உள்ள பைபிளை கோவில் நேரே நீட்டி பிசாசை அதட்டு என்றார் உடனே நான் சத்தமாக "ஏய் பிசாசே ஓடு"என்று அதட்டினேன். உள்ளிருந்து பல நாய்கள் வீச் வீச் என்று வவ்வால் போல சத்தம் போட்டுக்கொண்டு பல்வேறு திசையை நோக்கி ஓடின. உடனே இறைவன் என்னிடம் இந்த நாளில் பல்வேறு மந்திர கட்டுகள் முறிக்கப்பட்டன என்றார்.
.
இறைவன் என்னிடம் நீ மீண்டும் காலையில் அந்த முக்காணி பெண்ணின் வீட்டுக்கு போ என்று சொன்னதால் அந்த ஊரில் காலை 5.30 மணி வரை அமர்ந்து விட்டேன். விடியும் முன்னே எழுந்து திரும்ப நடந்து அந்த முக்கனி பாலம் வரும்போது காலை 6 மணி. காலையில் அந்த இடங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் ரம்யமாக இருந்தது. இறைவன் சொன்னபடி அந்த பெண்ணை தொடாமல் விட்டுவிட்டோமே என மிகவும் வருத்தமாக இருந்தது.
.
மீண்டும் முக்காணி: மீண்டும் முக்காணி ஊருக்குள் இரவில் போன அதே வீட்டுக்கு போனேன். வீடு திறந்திருந்ததால் உள்ளேயே போய் விட்டேன். இரவு பார்த்த அதே நல்ல உடல் வலிமை உள்ள ஒரு பெரிய மனிதர் வந்து என்னவென்று கேட்டார் அவரிடம் "நான் நேற்று இரவு இங்கு வந்தேன்" என சொல்லி இறைவன் என்னை மும்பையிலிருந்து அழைத்து வந்தார் இங்கு பெண் இருக்கிறது என்று சொல்கிறார் என்று விளக்கமாக சொன்னேன். அதற்குள் பெண்ணின் அம்மா அந்த பெண் எல்லோரையும் என்னால் பார்க்க முடிந்தது ஆனால் அவர் எதுவும் கோபப்படாமல் "அவன் சத்தம்போடுவன்" என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். நான் அவரிடம் எவன் என்று கேட்டேன் ஆனால் பதில் சொல்லவில்லை.
.
இறைவன் என்னிடம் அவர்கள் கும்பிடும் ஒரு சாமி சத்தம்போடும் என்று சொல்கிறார், நீ அவன் ஒன்றும் சொல்லமாட்டன் என சொல் என்றார். நானும் துணித்து அவரிடம் "என்னை சர்வவல்ல இறைவன் அழைத்து வந்துள்ளார் யாரும் உங்களை சத்தம் போடமாட்டார்கள் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்" என சொன்னேன். சிறிது யோசித்த பிறகு "உனது அம்மா அப்பாவை அழைத்துக்கொண்டு வந்து முறைப்படி பெண் கேள்" என சொல்லிவிட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன். .
.
என் தம்பி என்னை தேடி வந்துவிட்டான்:. திரும்பவும் அங்கிருந்து புறப்பட்டு ஸ்பிக் நகர் என்னும் இடத்துக்கு பக்கத்தில் வரும்போது எனது தம்பி என்னை தேடி வந்து பிடித்துக்கொண்டான். அதன் பிறகு அவன் என்னிடம் நீ எங்கு போனாலும் நானும் வருவேன் என்று பிடிவாதமாக என் பின்னே வர ஆரம்பித்தான். நான் எவ்வளவோ முயன்றும் அவனை விட்டு பிரிய முடியவில்லை. இறைவன் அவன் பின்னால் போகும்படி எனக்கு சொல்லிவிட்டார். நாங்கள் திரும்ப தூத்துக்குடியில் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டோம். அவன் என்னை வீட்டில் ஒப்படைத்து விட்டு சர்ச் போக புறப்பட்டான். வீட்டில் என்னை கண்டிப்பாக உள்ளே போட்டு அடைத்து விடுவார்கள் என தெரிந்ததால் அவனுடன் நானும் சர்ச் போக புறப்பட்டேன்.
.
சர்ச் உள்ளே நடந்த எதிர்பாரா சமபவங்கள்:
அது ஒரு மாரநாதா எனப்படும் ஒரு சிறிய பெந்தேகொஸ்தே சர்ச். நானும் எனது தம்பியும் சார்சினுள் போய் அமர்ந்தோம். சர்ச் உள்ளே இருந்த எல்லோருக்குள்ளும் பிசாசின் ஆவி இருப்பது என் கண்ணுக்கு தெரிந்ததால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தேவனை இவ்வளவு வாஞ்சையோடு தேடும் இவர்களுக்குள்ளும் பிசாசு எப்படி தங்கியுள்ளது என்று ஒரே குழப்பமாக இருந்தது. அப்பொழுது இறைவன் என்னிடம் "இங்கு உள்ளதெல்லாம் நோவா பேழையை உண்டாக்கி ஜலப்ரளயத்துக்கு தப்பும் போது கீழ்படியாமல் அழிந்துபோன மனிதர்களின் ஆவிகள் அவர்களுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது" .என்று சொன்னார் அப்பொழுது எனக்கு அது எதுவும் சரியாக புரியவில்லை. . ஜெபம் நடக்கும் வேளையில் மீண்டும் புயல் காற்று வீச ஆரம்பித்தது வானம் மிகவும் இருண்டு காணப்பட்டது, மின்சாரமும் இல்லாமல் போய் விட்டது. அப்பொழுது சர்ச்சில் உள்ள எல்லோரும் அந்த புயல் தாக்காமல் இருப்பதற்க்காக ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
.
உடனே இறைவன் என்னிடம் அவர்கள் ஜெபிப்பதை எதையும் நீ போருட்படுத்தாதே அவர்கள் ஜெபிப்பது போல நீயும் ஜெபிக்காதே என திட்டமாக தெரிவித்தார் அகவே நான் எதையும் பொருட்படுத்தாமல் கையில் இருந்த வேதத்தை படித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் எல்லோரும் கூட்டமாக ஜெபிக்க ஜெபிக்க என் மனம் என்னையும் அறியாமல் அவர்களுக்காக வேண்டுதல் செய்ய ஆரம்பித்தது. நான் இறைவனிடம் "ஆண்டவரே இங்கு வந்து ஜெபம் பண்ணும் இந்த ஒரு கூட்ட மக்களையாவது காபாற்றுமே" என கேட்ட அதே விநாடி பவர் வந்துவிட்டது மற்றும் வானத்தில் மேகம் கலைந்தது காற்றும் நின்றுவிட்டது. .
.
இறைவன் என்னை மிகவும் கடிந்து கொண்டார் "நான் உன்னை என்ன சொன்னேன் நீ என்ன செய்கிறாய். இந்த ஜனங்கள் இதுபோலவே நான் எதாவது ஒன்றை செய்ய நினைக்கும் போதெல்லாம் என்னுடைய சித்தம் என்ன என்பதை பொருட்படுத்தாமல் இப்படி ஒன்று கூடி ஜெபித்து அதை செய்ய விடாமல் தடுத்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது நடக்க வேண்டும் என்றுதான் ஜெபம் பண்ணுகிறார்களே அன்றி உம்முடைய சித்தப்படி எல்லாம் நடக்கட்டும் என்று சொல்லி அதை முடிப்பதில்லை. மனிதனுக்கு நன்மையை தோன்றுவதெல்லாம் நன்மையுமல்ல, அவனுக்கு தீமையாய் தோன்றுவதெல்லாம் தீமையுமல்ல. . அன்று கேத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்தபோது என்னை எப்படியாவது இந்த சிலுவை மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்று மட்டும் ஜெபித்திருந்தால் நானும் இரக்கப்பட்டு அவரை காப்பாற்றியிருப்பேன் ஆனால் மனு குலத்திற்கு இந்த பெரிய ரட்சிப்பு கிடைக்காமல் போய்விடும். ஆனால் அவர் முடிவில் உம் சித்தப்படி ஆகக்கடவது என்று சொல்லிய அந்த ஒரே வர்த்தயினால்தான் இற்று மனிதனின் இரட்சிப்புக்கு ஒரு வழி கிடைத்தது. . .
.
எனது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை ஏன்று கொண்ட எல்லோருடைய வார்த்தைக்கும் வல்லமை உள்ளது. ஆனால் இன்றைய கிறிஸ்துவை உடையவர்கள் இறைவனின் சித்தம் என்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அதற்குத்தான் ஜெபிக்கிறார்கள். அதுதான் நான் உன்னிடம் சொன்னேன் அவர்களுக்கு இரங்காதே என்று, ஆனால் நீயும் என் சொல்லை கேட்கவில்லை என கோபமாக பேசினார். . எனக்கு மிகவும் மன கஷ்டமாக இருந்தது, ஆராதனை முடிந்ததும் அங்கிருந்து திரும்ப எங்கள் வீட்டுக்கு நாங்கள் போனோம்.
.
இறைஆவி என்னை விட்டு வெளியேறியது:
என் மனம் மிகவும் கலக்கமாக இருந்தது உடனே எனக்கு மீண்டும் சிகரெட் குடிக்கும் எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பித்தது. என்னால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. கடையில் ஒரு கோல்ட் பிளாக் சிகரெட் வாங்கி பற்ற வைத்து புகை விட்டுக்கொண்டு இருக்கும் போது எனது கிறிஸ்தவ தம்பி என் எதிரே வந்து "என்னண்ணா இப்படி சிகரெட் பிடிக்கிறாய் ஆவியானவர் எவ்வளவு துக்கப்படுகிறார் ஏன்று தெரியுமா" ஏன்று கேட்க, ஏற்கனவே மன குழப்பத்தில் இருந்த நான் கொஞ்சமும் யோசிக்காமல் "ஆமாம் பெரிய ஆவியானவர்" என சொன்ன அதே நிமிடத்தில் என்னுள் இருந்து ஒரு ஆவி என்னைவிட்டு விலகி போவதை அப்படியே உணர்ந்தேன் அவ்வளவுதான் நான் சாதாரண மனிதனாக மாறிவிட்டேன். பிறகு என் கண்ணுக்கு யாரும் பேய் போல தெரியவுமில்லை எந்த ஆவியையும் என்னால் பார்க்க முடிய வில்லை. எல்லாமே சாதாரணமாக தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு இறைவன் என்னிடம் எதுவும் பேசவில்லை.
.
எனக்கு எல்லாமே இழந்து விட்டதை போல இருந்தது என்னால் தாங்கவே முடியவில்லை. அத்தோடு அதுவரை எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்த எனக்கு என் வேலை ஸ்தலத்தில் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு வந்தது, பண பிரச்சனை, உடம்பு பிரச்சனை என்று எல்லாமே என் மனதுக்குள் வந்து விட்டது. . சொர்க்கத்தில் இருந்த ஒருவன் திடீர் என அதை இழந்து போனால் தவிப்பது போல தவித்தேன். எவ்வளவோ ஜெபம் பண்ணியும் எந்த பதிலும் இல்லை. வேறு வழி இன்றி மீண்டும் மும்பை போக புறப்பட்டேன். .
தொடர்ச்சி .... நான்காம் பகுதி

நான்காம் பகுதி

மீண்டும் மும்பை பட்டணம்..
ஆவியின் வல்லமை எல்லாம் இழந்து போன நிலையில் மும்பை வந்து சேர்ந்த நான் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தேன். சுமார் ஒரு வார காலம் ஆபீஸ் போன போது என் மனதில் கொஞ்சமும் சமாதானம் இல்லை.
.
எல்லாவற்றையும் இழந்து விட்டோமே என்று மிகவும் சங்கடமாக இருந்தது. இந்நிலையில் இழந்த ஆவியை எப்படியாவது மீண்டும் பெற வேண்டும் என்ற வாஞ்சையில் ஒருநாள் மும்பையில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் இரவு சுமார் 9 மணிக்கு போய் அமர்ந்து மீண்டும் இறைவனை நோக்கி கண்ணீர் சிந்தினேன் "ஆண்டவரே நான் அனேக தவறுகள் பண்ணிவிட்டேன், என்னை ஒரு சிறு குழந்தையை போல எண்ணி மன்னிக்க கூடாதா, உண்மையில் எனக்கு உம்மை பற்றியோ, வேதத்தை பற்றியோ ஒன்றுமே தெரியாது. திடீர் என்று உம்முடைய ஆவியில் அபிஷேகம் பெற்றேன் ஆகையால் தெரியாமல் உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் பலமுறை தவறி விட்டேன். இன்னொருமுறை என்னை நினைத்தருளும்" என்று சொல்லி மீண்டும் மிகவும் அழுதேன்.
.
இரவு ஒரு மணி வரை இறைவனை வேண்டிக்கொண்டு அங்குள்ள ஒரு பெஞ்சில் படுத்துவிட்டேன் சிறிது நேரம் கழித்து அனேக நாய்கள் குறைத்துக்கொண்டு என்னை பார்த்து ஓடி வரவே எழுந்து வீட்டிற்கு போய் படுத்துவிட்டேன்.
.
மீண்டும் இறை ஆவியினால் நிரப்பபட்டேன்:காலை 6 மணிக்கு நான் எழுந்த போது மீண்டும் இறை ஆவி என்னை நிரப்பிஇருப்பது தெரிந்தது. ஆனால் இந்த முறை என்னை நிரப்பியிருந்த ஆவி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. மீண்டும் மனிதர்கள் எல்லோரும் பேய்கள் போல தெரிய ஆரம்பித்தனர். நான் வெளியில் வந்தபோது ஒரு சிறு பையன் வானத்தை நோக்கி கையை கட்டி அங்கிள் அங்கே பாருங்கள் வானம் சிகப்பு நிறமாக தெரிகிறது என்று சொன்னான். நான் வானத்தை பார்த்தேன் காலை மேகங்கள் சூரிய ஒளியினால் சிகப்பு நிறமாக தெரிந்தது உடனே என்னுள் இருந்த இறைவன் "அந்த பையன் சொன்னது சரியே நீ சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டு இன்று இந்த பட்டணத்தில் இன்று இரத்தக்களறி ஏற்படப்போகிறது" என்று சொன்னார்.
.
காலையில் என் காதுக்கு முதலில் எட்டிய செய்தி "பாபர் மசூதி இடிக்கப்பட்டு விட்டது" என்பதுதான். மும்பை பட்டணம் முழுவதும் ஒரே குழப்பம் அனேக இடங்களில் கொலைகள் மரணங்கள்.
.
எனக்கான பெண்ணை தேடி அலைந்தேன்:-
அப்படி ஒரு மோசமான நிலையில் மும்பை இருக்கும்போது, இறைவன் எனக்கு கட்டளை இட்டபடி காலையிலே புறப்பட்டு பல்வேறு இடங்களில் அலைந்து என்னக்கான பெண்ணை தேடினேன். ஒரு நாள் முழுவதும் அலைந்தும் இறைவன் எந்த பெண்ணையும் சரியான் பெண் என்று தேர்ந்தெடுக்கவில்லை. அன்று காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை ஆனால் எந்த பலகீனமும் எனக்கு இல்லை. இரவில் குர்லா என்னும் இடத்தில் உள்ள ஒரு பஸ் டெர்மினஸ் உள்ளே ஒரு பயணி இருக்கையில் அமர்ந்திருந்தேன். இறை ஆவி என்மேல் பலமாக இருந்தது மீண்டும் ஆதியில் நடந்த பல்வேறு காரியங்களை எனக்கு தெரியப்படுத்தியது 
என் கையில் கொஞ்சம் ரூபாய் மற்றும் சில்லறை இருந்தது. அதை இறைவன் கீழே போட்டுவிடும்படி சொன்னார். ஆனால் நான் போடவில்லை எதாவது தேவை வந்தால் என்ன செய்ய என்று நினைத்து கீழே போடமால் வைத்திருந்தேன். பிறகு அதுவே எனக்கு பெரிய வினையாக முடிந்தது.
.
இரவு சுமார் 8 மணிக்கு ஒரு போலிஸ்காரர் என்னை பிடித்து என்னை பற்றி விசாரித்தார். நான் இறைவன் என்னை அழைத்தது நடத்தியது எல்லாவற்றையும் சொன்னேன். உடனே சாப்பிட்டாயா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் ஒரு இடத்தை கை காட்டி அங்கு போய் சாப்பிடு என்று சொன்னார். நான் அங்கு போனேன். அங்கு இலவசமாக சாப்பாடு கொடுத்தார்கள் சாப்பிட்டு வந்து படுத்துவிட்டேன்.
.
மறுநாள் காலை மும்பை பட்டணமே வெறிச்சோடி கிடந்தது, எல்லா இடங்களிளுள் வன்முறை, அடைப்பு. காலையில் எழுந்து பார்த்தபோது ஆண்கள் மட்டும் பேய்கள் போல தெரிந்த ஏன் கண்களுக்கு பெண்களும் பேய்கள் போல தெரிய ஆரம்பித்தனர். சாலையில் நடந்துகொண்டிருந்த என்னக்கு ஒரு வீட்டில் அநேகர் சேர்ந்து பாட்டு பாடி இந்து சாமிக்கு பூஜை செய்துகொண்டு இருந்தனர். இறைவன் என்னை உள்ளே அழைத்து சென்றார். அங்கே ஒரு போட்டோவில் இருந்த பெண் இந்து சாமி என்னை பார்த்து மிகவும் அன்போடு சிரித்தது அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை . மேலும் அது என்னைபார்த்து எனது ஆவியால் நிரப்பி நான் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பெண்ணை உனக்கு தருவேன் என்று என்னோடு பேசியது. என்னால் நம்பவே முடியவில்லை.
.
இது என்ன? பைபிளில் உள்ள தேவன் நான் தான் உண்மை இறைவன் என்று சொல்லி என்னை நடத்தி வருகிறார் ஆனால் இந்த இந்து சாமியும் என்னோடு பேசுகிறதே என்ற குழப்பத்தில் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி தாதர் என்னும் இடம் சென்றேன். அங்கு பல இடங்களுக்கு போகும்படி இறைவன் சொன்னார் ஒரு நாள் முழுவது நடந்தே சுற்று சுற்று என்று சுற்றினேன். கால் வலியோ, களைப்போ கொஞ்சமும் இல்லை.
.
இரவு ரோட்டில் யாரும் நடமாடக்கூடாது என்று கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது மேலும் பல இடங்களில் போலீஸ் கூட்டம் கூட்டமாக இரவு காவலில் இருந்தனர். ஒரு முறை சிட்டி விநாயக் என்னும் இடத்தில் பல போலீஸ்கள் சேர்ந்து என்னை பிடித்து விசாரித்தனர். நான் இறைவன் என்னை அழைத்து வந்தது குறித்து சொன்னேன் உடனே ஒரு போலீஸ்காரர் என்னை பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் அமரும்படி சொன்னார் ஆனால் எனக்கு பின்னால் ரோட்டில் வேறொருவர் வந்தார் அவரை உடனே அடித்து விரட்டிவிட்டனர் ஆனால் என்னை ஒன்றும் செய்யவில்லை
..
(அப்பொழுது நடந்த பல அதிசய காரியங்களை பாதுகாப்பு கருதி மறைத்துள்ளேன்)

ஆவிகள் உலகினுள் போனேன்:
இரவானபோது தாதரில் உள்ள ஒரு RC சர்ச்சின் உள்ளே போனேன் அங்கு நான் பார்த்த காட்சி ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே இருந்த எல்லா மக்களும் பிசாசின் கூட்டங்களாக எனக்கு தெரிந்தனர். மேலும் இஸ்லாம் என்னும் மதத்தில் உள்ள ஆவியானது அந்த மதத்தில் உள்ள எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என கண்களுக்கு அப்படியே தெரிந்தது.
.
பேய் கூட்டத்துக்குள் உட்கார பிடிக்காத நான் அங்கிருந்து வெளியில் வந்தேன். வெளியில் வந்த நான் மனித உலகில் இருந்து ஆவிகள் உலகுக்குள் நுழைந்துவிட்டேன்.
.
சிர்டி சாய்பாபா என்னோடு பேசினார்:
ஆவிகள் உலகில் அனேக ஆவிகள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டு இருந்தன. அங்கு எதோ ஒரு திருவிழா நடந்தது கொண்டிருந்தது. நுழை வாயிலில் சிர்டி சாய்பாபாவின் ஒரு மிகப்பெரிய படம் ஒன்று இருந்தது அதன் முன்னால் இரண்டு சிறு பெண் குழந்தைகள் புத்தகம் வைத்து படித்துக்கொண்டு இருப்பது போல செய்து வைத்திருந்தனர்.
.
அங்கு பார்த்தபோது அந்த சாய்பாபா என்னோடு பேசினார் இயேசு பரிசுத்த ஆவியினால் எப்படி மரியாளின் வயிற்றில் உருவானார் என்பதையும் அவர் மிகப்பெரிய வல்லமை உள்ளவராய் இருந்ததன் காரணத்தையும் அந்த சாய்பாபா என்னோடு மனதில் பேசி சொன்னார். (சிலவற்றை நான் பாதுகாப்பு கருதி மறைத்துள்ளேன்).
.
மேலும் அவர் என்னிடம் இயேசுவை போல உலகில் உள்ள எல்லவற்றின்மேலும் அதாவது நோய். நொடி, மரணம் இவற்றின்மேல் வல்லமை உள்ள இன்னொருவரை இந்த உலகுக்கு தரும்படி இறைவனிடம் வேண்டும்படி சொன்னார். மேலும் நான் அந்த இடத்தில் வேண்டினால் அதுபோல் இறைவன் கொடுப்பார் என்றும் அதுவும் நமது இந்திய நாட்டுக்கு கொடுப்பார் என்று சொன்னார். ஆனால் நான் கேட்கவில்லை இறைவனும் அவர் சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. .
.
அங்கிருந்து ஆவிகள் உலகினுள் புகுந்தபோது அங்கு மிகப்பெரிய விருந்து நடை பெற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் உணவின் வாசனை மிகவும் மோசமாக இருந்தது என்னால் சகிக்க முடியவில்லை. உள்ளே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை ஆனால் லேசாக விடிந்துவிட்டது. காலையில் பார்த்தபோது அங்கு ஒன்றுமே இல்லை. ஒரு சாதாரண ரோடு தான் இருந்தது..
பணம் சாத்தானின் ஆயுதமானது :
அங்கிருந்து வந்தபோது அந்த அதிகாலை நேரத்தில் குட்டி பிசாசுகள் போல இருந்த இரண்டு கருப்பு பிள்ளைகள் என்னிடம் வந்து பிச்சை கேட்டது. கொஞ்சமும் யோசிக்காமல் பையினுள் கைவிட்டபோது ஏதோ இரண்டு நாணயங்கள் கிடைக்கவே அவர்கள் கையில் போட்டுவிட்டேன் உடனே அந்த பிள்ளைகள் இரண்டும் மறைந்துவிட்டன.
.
இறைவன் என்னை மிகவும் கடிந்து கொண்டார். நான் அப்பொழுதே உன்னை பணத்தை கீழே போட்டுவிடு என்று சொன்னேன் நீ கேட்கவில்லை. உலகத்தின் உள்ளே இருந்து ஜெயித்து வெளியே வந்த உன்னையும் கடந்து பணம் என்னும் மிகப்பெரிய பிசாசு போகிறது இனி அதை பிடிப்பது மிகவும் கடினம் என்றார்.
.
அவர் எனக்கு தெரியப்படுத்தியத்தின் பொருள் என்னவென்றால் மனித உலகம் ஆவிகள் உலகம் இரண்டினுள்ளும் சென்று வெளியே வந்த என்னிடம் இருந்த பணத்தை பிசாசுகள் வாங்கிச்சென்ற காரணத்தால் பணம் என்னும் வல்லமையுள்ள ஆயுதத்தை எடுத்துக்கொண்டு பிசாசு எனக்கு முன்னால் போகிறது என்பதுதான். .
.
பணம் என்னும் பிசாசை விரட்டினேன்:அது முதல் எனக்கு சோர்வுகள் வர ஆரம்பித்தன. பணம் என்னும் பிசாசு போகும் வழியை இறைவன் எனக்கு ஆவியில் உணர்த்தியதால் அதை பிடிக்க ஓடினேன் எத்தனை மைல் ஓடினேன் என்று எனக்கே தெரியாது கடைசியில் சோர்வாகி பகல் நேரத்தில் பிளாட்பாரத்தில் பைபிளை தலையின் கீழ் வைத்து படுத்துவிட்டேன். படுத்த சிறிது நேரத்தில் காகம் ஒன்று எச்சில் இலை ஒன்றை தூக்கி கொண்டுவந்து என் தலைக்கு பக்கத்தில் போட்டுவிட்டு சென்றது. அப்பொழுது என்னுள் இருந்த இறைவன் உன்னுடைய உண்மை மனைவி பிசாசினால் எச்சில் ஆக்கப்பட்டாள். அவள் பணத்தினால் பிடிக்கப்படடாள் என்று கூறினார். அப்பொழுது எனக்கு அது பற்றி ஒன்றும் புரியவில்லை.
.
இந்த சம்பவங்களுக்கு பிறகு எனது மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக் பாதிப்பு ஏற்பட்டு குழம்ப ஆரம்பித்தது. என்னுள் இருந்து என்னை வழி நடத்திய சக்தியை காணவில்லை. ஆம்! அவர் சொல்லும் ஒவ்வொரு சின்ன வார்த்தைக்கு கீழ்படியாமல் போனாலும் அதன் விளைவு மிக பெரியதாக இருந்தது. இறைவன் என்னிடம் கையில் இருக்கும் பணத்தை கீழே போட்டுவிடு என்று சொன்ன போதே நான் போட்டிருந்தால் என் நிலைமையே வேராக இருந்திருக்கும் ஆனால் "திடீர் என்று ஏதாவது தேவை என்றால் பணம் வேண்டுமே" என்று அதை கீழே போட மனதில்லாமல் வைத்திருந்ததால் இரண்டாவது முறையாக அவர் சொல்லுக்கு கீழ்படியாமல் இறைவனின் பிரசன்னத்தை இழந்தேன்.
.
"பணம்" இன்று உலகில் எல்லோரையும் ஆட்டி வைக்கும் பேய்" என் பிடியில் இருந்து நழுவி என்னையும் கடந்து போய்விட்டது"

எல்லாவற்றையும் இழந்து மூளை குளம்பியவனாக என்ன செய்வதென்று தெரியாமல் மும்பையில் எங்கோ ஒரு இடத்தில் நின்று கொண்டிருத்த எனக்கு அத்தனை நாள் சாப்பிடாமல் இருந்ததற்கும் சேர்த்து வயிர்பசி எடுக்க ஆரம்பித்தது. பணம் எதுவும் கையில் இல்லை. பசி தாங்கமுடியாமல் என் கழுத்தில் கிடந்த தங்க செயினை கழன்றி ஏதாவது பணம் தரும்படி சிலரிடம் கேட்டேன் ஆனால் அவர்களோ அது திருட்டு செயின் என்று கருதி பணம் தர மறுத்துவிட்டனர். பசிக்கு உதவாத இந்த செயின் எதற்கு என்று எண்ணி செயினை தூர வீசிவிட்டேன் பசியும் தீர்ந்த பாடில்லை பணமில்லாததால் பஸ் ஏறி விட்டுக்கு போகவும் முடியவில்லை.    குழப்பத்தில் சோர்வில் இருந்த நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் ஒரு சிறு பையனை போய் பிடித்து விட்டேன் அங்கு பக்கத்தில் நின்ற ஒரு மராட்டி வாலிபன் "அவனை ஏன் பிடித்தாய்? நீ குழந்தை திருடுபவன் தானே" என்று சொல்லி என் கன்னத்தில் வெகு வேகமாக ஒரு அறை கொடுத்தான் அவ்வளவு தான் என் ஒரு காதில் விர் என்று ஒரே சத்தம். (அத்த காது இன்று வரை சரியாக கேட்பது இல்லை).
.
அப்பொழுது இறைவன் என்னிடம் பேசினார் "உடனே இந்த இடத்தை விட்டு ஓடு உன் வீட்டுக்கு திரும்பி போய்விடு, நான் உன்னை தனியே விட்டு விட்டால் இந்த பிசாசுகள் உன்னை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் ஓடு, நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் அவனுக்கு பலமுறை திருந்த நேரம் கொடுத்தேன் ஆனாலும் அவன் திருந்தவில்லை" என்று கடும் கோபத்தில் கூறினார். ஆனால் அப்பொழுது கூட ஆண்டவரே இவர்களை மன்னியும் தெரியாமல் அடித்துவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டே ஓடினேன். என்னை பலபேர் துரத்தி வந்தார்கள். அது அனேக ஆள் நடமாட்டம் உள்ள மும்பையின் முக்கிய பகுதியாக இருந்ததால் தப்பித்து விட்டேன். ஆனால் இறை ஆவி என்னை விட்டு போவிட்டது.
.
இரவெல்லாம் எங்கு படுத்தேன் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என் சுய புத்தியை கிட்டதட்ட இழந்து விட்டேன். காலை 4 மணியளவில் டிக்கட் இல்லாமல் ரயில் ஏறி செம்பூர் போய் செர்ந்தேனா அல்லது இறைவன் என்னை சேர்த்து விட்டாரா தெரியாது. என் வீட்டில் நண்பர்களிம் வந்து சேர்ந்த போது நான் பாதி பயித்தியமாக இருந்தேன்.
.
எனக்கு "எதோ" ஆகி விட்டது என்று நினைத்து என் நண்பர்கள் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றார். ஆனால் அவர் எனக்கு பிசாசின் கை ஆள் என்றும் என்னிடம் சேகரிக்கும் தகவலை எல்லாம் உடனே சாத்தான் உலகத்துக்கு சொல்லிவிடுவார் என்றும் என் மனதுள் சொல்லப்பட்டதால் நான் அவருக்கு கொஞ்சமும் ஒத்துழைக்க வில்லை.
.
பிறகு என்னை ஒரு இஸ்லாமிய மந்திரிப்பவரிடம் "சீதா கேம்ப்" என்ற இடத்துக்கு அழைத்து சென்றார்கள் எதுவும் சரியாக வில்லை ஆனால் ஆட்டோவில் திரும்பி வரும் போது மிக பயங்கரமான ஒரு காட்சியை கண்டேன் (இது உண்மை. நான் எழுதும் எதுவும் பொய் அல்ல நான் பொய்யே சொல்லக்கூடாது என்று முடிவெடுத்து வாழ்ந்து வருபவன் யாரும் என்னை தவறாக என்ன வேண்டாம்)
.
என்னை அழைத்து வந்த இரண்டு நண்பர்கள் ஒருவன் கொஞ்சம் கருப்பு ஒருவர் நல்ல சிகப்பு இரண்டு பேரும் என்னை நடுவில் உட்கார வைத்து நான் ஆட்டோவில் இருந்து குதித்துவிடக்கூடாது என்று என்னை இருக்க பிடித்து வைத்திருந்தனர். அப்பொழுது திடீர் என்று எனது ஒரு பக்கத்தில் இருந்த கருப்பு நண்பர் "பரமசிவனாகவும்" இன்னொருவர் இறைவனின் "விழுந்து போன தூதனாகவும்" என் கண்ணுக்கு தெரிந்தனர். இருவரும் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி பாதாளம் என்ற ஒரு முடிவில்லா குழிக்குள் தள்ள முயல்வதை அப்படியே பார்த்தேன். ஐயோ என்னை விடுங்கள் என்று சத்தம் போடவும் ஆட்டோ காரன் நின்றுவிட்டார். அது "செம்பூர் டையமண்ட கார்டன்" என்ற இடம். அங்கு இறங்கி விட்டோம் பின்பு என் நண்பர்களை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. (இதை பற்றி அனேக ரகசியங்களை இறைவன் எனக்கு பிறகு தெரியப்படுத்தினார் அதை இறைவனுக்கு சித்தமானால் இந்துக்களின் பகுதியில் எழுதுகிறேன்)
.
எனது நண்பர்கள் எனது சொந்த ஊருக்கு கடிதம் போட்டிருந்ததால் எனது கிறிஸ்த்தவ தம்பி என்னை தேடி மும்பை வந்து என்னை தூத்துக்குடி கூட்டிக்கொண்டு போனான் தூத்துக்குடி வந்ததும் எல்லாமே சரியாகி நார்மல் நிலைக்கு வந்து விட்டேன்.
.
இந்த நேரத்தில் எனக்கு "களக்காடு" என்னுக் உருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் பார்த்து பேசி முடித்தனர். அந்த பெண்ணின் அக்கா மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்ததால் இந்த திருமணம் பேசி நிச்சயமாகிவிட்டது.


பகுதி ஐந்தில் தொடரும்.....

4 comments:

Prabu said...

மூன்றாம் பாகம் எப்போது வரும்?

SUNDAR said...

சகோதரரே தொடர்ந்து நடந்த சம்பவங்களை கீழ்க்கண்ட தளத்தில்
பதிவிட இருக்கிறேன்

http://www.lord.activeboard.com/index.spark

இதை கிளிக் செய்து வாசிக்கவும்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
MERCY said...

It is useful for me. Where is 5th part?. I will eagerly waiting for this part